`நாடாளுமன்றத்தில் இந்த வார்த்தைகள் இனி பயன்படுத்தக்கூடாது’ – வெளியானது பட்டியல்

மக்களவையிலும், மாநிலங்களிலும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அதில் வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு ஊழல், கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி, இரட்டை வேடம், பயனற்றது, ரத்தக்களரி, குரூரமானவர், ஏமாற்றினார், குழந்தைத்தனம், கோழை, கிரிமினல், முதலை கண்ணீர், அவமானம், கழுதை, கண்துடைப்பு, ரெளடித்தனம், போலித்தனம், தவறாக வழிநடத்துதல், பொய், உண்மையல்ல, முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள், லாலிபாப், பாப்கட் ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

நாடாளுமன்றம்

ஒருவேளை இந்த வார்த்தைகள் இனி மக்களவை அல்லது மாநிலங்களவைத் பயன்படுத்தப்பட்டால் அதனை அவைக்குறிப்பிலிருந்து சபைத் தலைவர் நீக்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகளில் ஆங்கில வார்த்தைகளும், இந்தி வார்த்தைகளும் அதிகம் இடம்பெற்றுள்ளன.

மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்கும் நிலையில், இந்த அறிவிப்பு கவனம்பெற்றிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.