நீட் தேர்வை தள்ளி வைக்க முடியாது – டெல்லி நீதிமன்றம் அதிரடி…

நீட் தேர்வை தள்ளி வைக்க கோரி அனுபா ஸ்ரீவாஸ்தா என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பருவ மழை பெய்து வருவதாகவும் அதனால் ஜூலை17ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

இத்தேர்வை மீண்டும் நடத்தவும் குறுப்பிட்டு இருந்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ் சந்திர சர்மா தலைமையினலான அமர்வு முன் வழக்கறிஞர் மம்தா சர்மா முறையிட்டார். இந்த முறையீட்நீட் தேர்வை தள்ளி வைக்க கோரி அனுபவா ஸ்ரீவாஸ்தா என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் நாடு முழுவதும் தற்போது பருவ மழை பெய்து வருகிறது எனவும். தொலை தூரத்தில் உள்ள நீட் தேர்வு மையத்தை கருத்தில் கொண்டு வருகின்ற ஜூலை 17ம் தேதி நடைபெற்வுள்ள நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் எனவும் அம்மனுவில் குறுபிட்டு இருந்ததை பரிசீலித்து இன்று உயர்நீதிமன்றம் விசாரனைக்கு எடுத்துக்கொண்டது.

இந்த விசாரணை முடிவில் உயர்நீதிமன்றம் நீட் தேர்வை ஒத்தி வைக்க கோரிய மனுவை இன்று தள்ளுபடி செய்தது. சில மாணவர்கள் செல்ல முடியவில்லை என்பதற்காக தேர்வையே தள்ளி வைக்க கோருவது ஏற்ப்புடையது அல்ல என்றும், இனி இதுபோன்ற மனுக்கள் தக்கல் செய்யப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.