"வேட்டி கட்டி நடிக்க வேண்டாம்ன்னு அப்பா சொல்லியிருக்கார். ஏன்னா?!" – ரன்பீர் கபூர்

பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூர் நடிப்பில், இயக்குநர் கரண் மல்ஹோத்ரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘Shamshera’ படம் ஜூலை 22ம் தேதி இந்தி உட்படப் பல மொழிகளில் வெளியாகவுள்ளது. பாலிவுட்டின் சீனியர் நடிகரான சஞ்சய் தத், இப்படத்தில் வில்லனாக, போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பீரியட் படமான இது, 1800ம் ஆண்டுகளில் இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடிய ஒரு கொள்ளையர் கூட்டத்தைப் பற்றியது என்று கூறப்படுகிறது.

ரன்பீர் கபூர், ரிஷி கபூர்

இப்படம் ரன்பீரின் வழக்கமானப் படங்களைப் போல் இல்லை. இதுவரை பீரியட் படங்களில் நடித்திராத ரன்பீர், இப்படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் வேட்டி (Dhoti) அணிந்து பழங்குடியினர் போல நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டையொட்டி நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ரன்பீர், தனது ‘Shamshera’ படத்தைப் பற்றியும் தன் தந்தையைப் பற்றியும் நிறைய சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது தன் தந்தை ரிஷி கபூர், ‘வேட்டி அணிந்து நடிக்க வேண்டாம்’ என்று தன்னிடம் சொன்ன அறிவுரையைப் பற்றிக் கூறினார்.

Shamshera

இது பற்றி விரிவாக பேசிய அவர், “வேட்டி (Dhoti) அணிந்து நடிக்க வேண்டும் என்ற கட்டாயம் வந்தால், அதுபோன்ற படங்களில் நடிக்க வேண்டாம் என்று என் தந்தை என்னிடம் கூறினார். ஏனென்றால் என் தந்தை அப்படி நடித்ததில்லை. அது நமக்கு செட் ஆகாது என்று கூறுவார். ஆனால் ஒரு நடிகனாக இருக்கும் பட்சத்தில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிக்கவேண்டும். வித்தியாசமாக முயற்சிகள் செய்து பார்க்கவேண்டும். இது நமக்கு செட் ஆகாது என்று ஒதுங்கிவிட முடியாது. நான் 15 வருடங்களாக நடித்து வருகிறேன். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் புதிதாக யோசித்து வித்தியாசமான ஒன்றைச் செய்ய வேண்டியது அவசியம். அப்படி ஒரு வித்தியமான படம் Shamshera. எனவே அதில் நடிக்க ஒத்துக்கொண்டேன்” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.