அரசு ஆரம்பப்பள்ளியில் திடீர் ஆய்வு.. மாணவிகளுடன் தானும் ஒரு மாணவியாக அமர்ந்து பாடங்களை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர்!

காஞ்சிபுரம் அருகே காலூர் ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பள்ளியில் கழிவறைகள் சுகாதாரமாக உள்ளதா? குடிநீர் தரமானதாக உள்ளதா என ஆய்வு செய்த அவர், பின்னர் வகுப்பறைகளுக்குள்ளும் சென்று பார்வையிட்டார். அப்போது மாணவிகளுடன் தானும் ஒரு மாணவி போல் அமர்ந்துகொண்டு பாடங்கள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

முன்னதாக தொடக்கப்பள்ளி அருகே உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்ற ஆட்சியர் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவை சாப்பிட்டுப்பார்த்து அதன் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.