ஆசிட் குடிக்கவைத்து, கொடுமைப்படுத்திய மாமியார்?.. பரிதாபமாக உயிரிழந்த மருமகள் – அஸ்ஸாமில் அதிர்ச்சி

அஸ்ஸாம் மாநிலம், கரீம்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பைரப்நகர் பகுதியில், கணவன் மனைவியான ஷகீல் அகமது – சும்னா பேகம் தம்பதியர் வசித்து வந்தனர்.

மருமகளை ஆசிட் குடிக்கவைத்துக் கொடுமைப்படுத்திய மாமியார்

இவர்களின் குடும்பத்தில், கடந்த சில நாள்களாகவே சும்னா பேகத்தை, அவரின் கணவர் ஷகீல் அகமது மற்றும் மாமியார் சித்ரவதை செய்துவந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சும்னா பேகம் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதில், ஷகீல் அகமதுவும், இவரின் அம்மாவும், சும்னா பேகத்தை ஆசிட் குடிக்கவைத்துக் கொடுமைப்படுத்தியதால் தான் அவர் உயிரிழந்தார் என கூறப்படுகிறது. பின்னர் இதுதொடர்பாக சும்னா பேகத்தின் குடும்பத்தினர், போலீஸில் புகாரளித்ததன் அடிப்படையில், ஷகீல் அகமது மீது வழக்கு பதிவு செய்து போலீஸ் விசாரித்து வருகிறது.

போலீஸ்

இந்த சம்பவம் தொடர்பாக ஊடகத்திடம் பேசிய கரீம்கஞ்ச் மாவட்ட எஸ்.பி பத்மநாப் பாருவா, “சும்னா பேகம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அங்கு அவர் உயிரிழந்துவிட்டார். இதில், கடந்த சில நாள்களாகவே கணவர், மாமியாரால் மனதளவிலும், உடலளவிலும், சும்னா பேகம் சித்ரவதை செய்யப்பட்டிருக்கிறார் எனத் தெரிகிறது. எனவே நாங்கள் அவரின் கணவரைக் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளோம்” எனக் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.