ஆர்ப்பாட்டக்காரரின் கோரிக்கைகள் நியாயமாகக் கையாளப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

ஆர்ப்பாட்டக்காரர்களினால் முன்வைக்கப்படுகின்ற நியாயமான கோரிக்கைகள் தொடர்பாக ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கான புறச் சூழல்களை உருவாக்கி, குறித்த விவகாரம் நியாயமாக அணுகப்பட வேண்டும் என்று கடற்றொழில்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் தொடர்பாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று (14) கலந்துரையாடிய போதே
அமைச்சர் இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் பிரஸ்தாபிக்க இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டு மக்களினால் முன்வைக்கப்படுகின்ற கோரிக்கைகளும் எதிர்பார்ப்புக்களும் நியாயமான முறையில் பரிசீலிக்கப்பட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை பதில் ஜனாதிபதிக்கு எடுத்துரைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

EPDP news

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.