இலங்கை ஜனாதிபதியாக சற்றுமுன் ரணில் பதவிப்பிரமாணம்!



கோட்டாபய ராஜபக்ச உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன இன்று காலை அறிவித்திருந்தார்.

ஜுலை 14ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் உத்தியோகபூர்வமான அவர் பதவி விலகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதில் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த விடயத்தை பிரதமர் ஊடகப் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது. 





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.