எப்படி பளபளன்னு இருக்குது பாருங்க.. பிளாஸ்டிக் தடையே இனி தேவை இருக்காதோ?

சமீபத்தில் மத்திய அரசு ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது என்பது தெரிந்ததே.

இந்த தடை காரணமாக பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் விற்பனை வெகுவாக பாதித்தது என்பதும், அதற்கு பதிலாக காகிதத்தில் உற்பத்தியாகும் பொருட்களின் விற்பனை மற்றும் உற்பத்தி அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிளாஸ்டிக் கழிவுகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்தி லடாக் நிர்வாகம் ஒரு புதிய சாதனையை செய்துள்ளது.

பிளாஸ்டிக் கழிவுகளால் சாலை

இமயமலைப் பகுதியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், கரியமில கழிவுகளை குறைக்கவும் லடாக் நிர்வாகம் பிளாஸ்டிக் கழிவுகளால் சாலைகளை அமைக்க முடிவு செய்துள்ளது.

உள்ளூர் பொறியாளர்களுக்கு பயிற்சி

உள்ளூர் பொறியாளர்களுக்கு பயிற்சி

குறைந்தபட்சம் 10 சதவீத சாலைகள் பிளாஸ்டிக்கால் கட்டப்படும் என்றும், இதற்காக மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் (சிஆர்ஆர்ஐ) உள்ளூர் பொறியாளர்களுக்கு பயிற்சி அளித்தது என்றும் தகவல் வெளியாகியுள்ளன.

லடாக் நிர்வாகம்
 

லடாக் நிர்வாகம்

லடாக் நிர்வாகம், சாலைகள் அமைப்பதில் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்துவதற்கான சட்ட கட்டமைப்பையும் அங்கீகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லடாக்கின் பொதுப்பணித்துறையின் நிர்வாக செயலாளரால் இது குறித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவில் லடாக்கில் சாலை கட்டுமானத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்த வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு

பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு

லடாக்கில் பிளாஸ்டிக் கழிவு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக லடாக்கின் அனைத்து சாலைகளிலும் பிளாஸ்டிக் பாட்டில்கள், கொள்கலன்கள் உட்பட குறைந்தது 10% பிளாஸ்டிக் கழிவுகள் இருக்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் இயந்திரங்கள்

பிளாஸ்டிக் இயந்திரங்கள்

லே மற்றும் கார்கில் பகுதிகளில் பிளாஸ்டிக் இயந்திரங்களைத் துண்டாக்குவதையும், சாலைகள் அமைப்பதில் குறைந்தபட்சம் 10% பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதையும் லடாக் நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்புகள்

பயிற்சி வகுப்புகள்

லடாக் நிர்வாகம் உள்ளூர் பொறியாளர்களுக்கான இதுகுறித்த பயிற்சியை வழங்க திட்டமிட்டுள்ளது. புதுடெல்லியில் உள்ள மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் (CRRI), விஞ்ஞானிகள் கிராமப்புற பொறியியல் நிலையம், ஊரக வளர்ச்சித் துறை, எல்லை சாலைகள் அமைப்பு (BRO), தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (BRO) ஆகியவற்றின் உதவியால் சாலை பொறியாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 சாலை பொறியாளர்கள்

சாலை பொறியாளர்கள்

இந்த பயிற்சியானது லடாக்கின் குளிர்ந்த காலநிலையில் சாலை கட்டுமான நடவடிக்கைகள் எடுப்பது எப்படி? மற்றும் சாலை கட்டுமான தொழில்நுட்பங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை சிறப்பாகப் பயன்படுத்துவது எப்படி? என சாலை பொறியாளர்களுக்கு பயிற்சி அளிக்கின்றது. .

 ஐந்து விஞ்ஞானிகள்

ஐந்து விஞ்ஞானிகள்

புதுடெல்லியில் உள்ள ஐந்து CRRI முதன்மை விஞ்ஞானிகள் குழு கடந்த ஒரு வாரமாக உள்ளூர் பொறியாளர்களுடன் பயிற்சி வகுப்புகளை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பயிற்சியின் போது உந்துதல் பகுதி பிளாஸ்டிக் கழிவுகளின் பயன்பாடு, உள்நாட்டில் கிடைக்கும் பொருட்களின் பயன்பாடு மற்றும் வேகமான சாலை கட்டுமானத்திற்கான குளிர் கலவை தொழில்நுட்பம் ஆகியவை கற்று கொடுக்கப்பட்டன.

 பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்துதல்

பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்துதல்

கடந்த சில ஆண்டுகளாக லடாக்கில் குவிந்து கிடக்கும் டன் கணக்கில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற இதுபோன்ற தொழில்நுட்பம் உதவும் என்று லடாக் பிரதேச ஆணையர் தெரிவித்தார். லடாக் அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் சாலை கட்டுமானத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை மீண்டும் பயன்படுத்துவதற்கான மேம்பட்ட நுட்பங்களை கற்றுக்கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 நீண்ட உழைப்பு

நீண்ட உழைப்பு

மேலும் பிளாஸ்டிக் கழிவுகளினால் போடப்படும் சாலை பார்ப்பதற்கு பளபளவென இருப்பதோடு, நீண்ட வருடங்களுக்கு நீடித்து உழைக்கும் என்றும் குறைந்தது 15 வருடங்களுக்கு மாற்றுச்சாலை தேவையில்லை என்றும் கூறப்படுகிறது.

தடை தேவையில்லை

தடை தேவையில்லை

லடாக் போன்றே அனைத்து நகரங்களின் நிர்வாகங்களும் பிளாஸ்டிக் கழிவு பொருட்களை பளபள சாலை போன்ற ஆக்கபூர்வமான விஷயங்களுக்கு பயன்படுத்தினால் பிளாஸ்டிக் பொருட்களின் தடையே தேவையில்லாமல் போகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Ladakh To Build Roads From Plastic Waste For A Sustainable Future

Ladakh To Build Roads From Plastic Waste For A Sustainable Future | எப்படி பளபளன்னு இருக்குது பாருங்க.. பிளாஸ்டிக் தடையே இனி தேவை இருக்காதோ?

Story first published: Friday, July 15, 2022, 7:51 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.