“ஓபிஎஸ், தன் செயலுக்கு இபிஎஸ்-ஸைச் சந்தித்து வருத்தம் தெரிவிக்க வேண்டும்..!" – செல்லூர் ராஜு

அ.தி.மு.க-வில் அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரையிலுள்ள காமாரஜர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

செல்லூர் ராஜூ

பின்பு செய்தியாளர்களிடம் பேசியவர், “அ.தி.மு.க-வில் நான் கேட்காமலேயே கழக அமைப்புச் செயலாளராக பதவி வழங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

அ.தி.மு.க-வுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் எப்போதும் விஸ்வாசமாக இருப்பேன். `நம்மை நம்பி இருக்கும் தொண்டர்களுக்கு நாம் விஸ்வாசமாக இருக்க வேண்டும்’ என ஜெயலலிதா கூறினார்.

எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்க பாடுபடுவேன். அ.தி.மு.க தொண்டர்களின் புனித தலமாக தலைமை அலுவலகம் விளங்குகிறது. அப்படிப்பட்ட இடத்தில் வன்முறை சம்பவம் நிகழ்ந்தது வருத்தமளிக்கிறது.

செல்லூர் ராஜூ

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க ஒன்றுபட்டிருக்கிறது. பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைய வேண்டும்.

பிரிந்து சென்றவர்கள் மனம் திருந்தி வந்தால் ஏற்றுக்கொள்ளவோம். ஓ.பி.எஸ் ஏட்டிக்குப் போட்டியாக செயல்படுவதால் எந்த பயனும் இல்லை. யார் பக்கம் கட்சி இருக்கிறது என்பதை ஓ.பி.எஸ் புரிந்துகொள்ள வேண்டும்.

செல்லூர் ராஜூ

அ.தி.மு.க.வில் சாதி ரீதியாக பதவி வழங்குவதில்லை. ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து வருத்தம் தெரிவிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி பின்னால் யார் வேண்டுமானாலும் வரலாம்.

அ.தி.மு.க-வை நம்பியவர்கள் கெட்டதில்லை. நம்பாமல் கெட்டவர்கள்தான் உள்ளனர். ஓ.பி.ரவீந்திரநாத்தை நீக்கியதால் அ.தி.மு.க-வுக்கு எந்தவொரு இழப்பும் இல்லை. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் கட்சியின் பலம் நிர்ணயம் செய்யப்படாது. தொண்டர்களின் பலமே அ.தி.மு.க” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.