கடலில் அடித்து செல்லப்பட்ட தந்தை, மகன் பலி| Dinamalar

புதுடில்லி: ஓமன் கடற்கரை ஓரம் விளையாடிக் கொண்டிருந்த மஹாராஷ்டிராவைச் சேர்ந்த குடும்பத்தினரை அலை அடித்துச் சென்றதில், தந்தை மற்றும் 6 வயது மகன் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர் சசிகாந்த், 42. இவர், மனைவி மற்றும் 9 வயது மகள் ஸ்ருதி, 6 வயது மகன் ஷ்ரேயஸ் ஆகியோருடன், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் வசித்தார். அங்கு விற்பனை மேலாளராக பணியாற்றி வந்தார். கடந்த 10ம் தேதி, விடுமுறையை கொண்டாட, குடும்பத்துடன் ஓமன் சென்றார். ஓமன் கடற்கரை ஓரம் உள்ள பாறையில், குடும்பத்தினருடன் அமர்ந்திருந்தார்.

அப்போது, மிக ஆக்ரோஷமாக வந்த ராட்சத அலைகள், பாறையின் மீது வேகமாக மோதின. பாறை மீது விளையாடிக் கொண்டிருந்த சசிகாந்தின் குழந்தைகளை, அந்த ராட்சத அலைகள் கடலுக்குள் இழுத்து சென்றன. அவர்களை காப்பாற்ற, சசிகாந்தும் கடலுக்குள் குதித்தார்; மூவரும் காணாமல் போயினர்.சசிகாந்த் மற்றும் அவரது மகன் ஷ்ரேயஸ் உடலை மீட்புப் படையினர் மீட்டனர்; மகளை தேடும் பணி நடக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.