சர்ச்சைக்குரிய ட்விட்டர் விவகாரம்: ஆல்ட் நியூஸ் பத்திரிக்கை நிறுவனர் முகமது ஜுபைருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது டெல்லி அமர்வு நீதிமன்றம்..!!

டெல்லி: ஆல்ட் நியூஸ் பத்திரிக்கை நிறுவனர் முகமது ஜுபைருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி டெல்லி அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.50,000 ரொக்க ஜாமின் அடிப்படையில் முகமது ஜுபைரை டெல்லி அமர்வு நீதிமன்றம் ஜாமினில் விடுவித்தது. நீதிமன்றத்தின் முன் அனுமதி பெறாமல் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது என்று நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார். சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவுக்காக பத்திரிக்கையாளர் முகமது ஜுபைர் மீது உ.பி., டெல்லியில் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.