திரு.கோட்டாபய ராஜபக் ஷ தனது ஜனாதிபதி பதவியில் இருந்து உத்தியோகபூர்வமாக விலகியிருப்பதாக சபாநாயகர் அறிவிப்பு

திரு.கோட்டாபய ராஜபக்க்ஷ தனது ஜனாதிபதி பதவியில் இருந்து உத்தியோகபூர்வமாக விலகியுள்ளார்.

சபாநாயகர் மஷிந்த யாப்பா அபேவர்தன இன்று (15)  இதனை அறிவித்தார்.

திரு.கோட்டாபய ராஜபக் ஷ ஜனாதிபதி பதவியில் இருந்து தான் உத்தியோகபூர்வமாக இராஜினாமா செய்வதாக நேற்று (14) கடிதம் மூலம் சபாநாயகர் மஷிந்த யாப்பா அபேவர்தவுக்கு அறிவித்திருந்தார்;.

இந்த கடித்தின் உண்மைத்தன்மையையடுத்து சட்ட ரீதிலான நடவடிக்கைகளை ஆராய்ந்த பின்னர் இன்று நாட்டு மக்களுக்கு அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை சபாநாயகர் மஷிந்த யாப்பா அபேவர்தன மேற்கொண்டிருந்தார்.

அதற்கு அமைவாக சபாநாயகர் இதிரு.கோட்டாபய ராஜபக் ஷ தனது ஜனாதிபதி பதவியில் இருந்து உத்தியோகபூர்வமாக விலகியிருப்பதாக அறிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.