தேர்வில் சாதி குறித்து சர்ச்சையாக கேள்வி இடம்பெற்ற விவகாரத்தில் விளக்கம் அளிக்க நோட்டீஸ்

சென்னை:
பெரியார் பல்கலைக்கழக தேர்வில் சாதி குறித்து சர்ச்சையாக கேள்வி இடம்பெற்ற விவகாரம் தொடர்பாக மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சமத்துவ தலைவரான பெரியார் பெயர் கொண்ட சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், முதுகலை தேர்வில், தமிழகத்தில் எது தாழ்ந்த சாதி ? என கேள்வி கேட்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் மாணவி ஒருவர் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மேலும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் விளக்கம் பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், வரலாற்றுத்துறை தலைவர் ஆகியோருக்கு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.