“25 லட்சம் தரேன் எனக்கு மனைவியா வேலை செய்” – Big பிசினஸ்மேனால் நொந்துப்போன நீத்து சந்திரா!

விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை, ஜெயம் ரவியின் ஆதி பகவன் ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான பிரபல பாலிவுட் நடிகையான நீத்து சந்திரா, தனது தற்போதைய நிலை குறித்து கண்ணீர் வடித்து உருக்கமாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Bollywood Hungama தளத்துக்கான பேட்டியில் நடிகை நீத்து சந்திரா பேசியதாவது:

“தேசிய விருது பெற்ற 13க்கும் மேற்பட்டோருடன் சினிமாத்துறையில் நான் பணியாற்றி இருந்தாலும், தற்போது ஓரங்கட்டப்பட்டவளாகவே இருக்கிறேன். வெற்றிகரமான நடிகையின் தோல்விக்கதையாகத்தான் நான் இருக்கிறேன். வேலையில்லாமல், பணம் இல்லாமல்தான் இருக்கிறேன்.

இதனாலேயே மிகப்பெரிய தொழிலதிபர் ஒருவர் என்னிடம் அவருக்கு மனைவியாக இருக்க 25 லட்சம் ரூபாய் மாதச்சம்பளம் தருவதாக கூறினார். அதைக் கேட்டு வேதனையடையாத நாளே இல்லை.

image

முன்னணி இயக்குநர் ஒருவரின் படத்துக்கான ஆடிஷனுக்கு சென்றபோது ஒரு மணிநேரத்திலேயே என்னை திருப்பி அனுப்பிவிட்டார்கள். அதாவது என்னை நிராகரித்து அனுப்பி என்னுடைய உறுதியை குலைப்பதற்காகவே அப்படி செய்தார்கள்.

தற்கொலை செய்துக்கொண்ட சுஷாந்த் சிங்கை போல நானும் பல முறை தற்கொலை சிந்தனைகளை கடந்து வந்திருக்கிறேன். இங்கு ஒரு நபர் இறந்தால் மட்டும்தான் அவர்களது வேலை என்னவென்று வெளியே தெரிய வரும் போல.” என நீத்து சந்திரா கண்ணீர் சிந்தி உருக்கமாக பேசியிருக்கிறார்.

இந்தி, தெலுங்கு, தமிழ், போஜ்புரி என பல மொழிகளில் நடித்துள்ள நீத்து சந்திரா ஹாலிவுட்டிலும் தன்னுடைய சொந்த முயற்சியால் கால் பதித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

முன்னதாக திரைத்துறையில் நடிகைகளுக்கான பாலியல் சீண்டல்கள், பாலியல் ரீதியான உறவுகளுக்கு ஒத்துழைக்காததால் அவர்கள் ஓரங்கட்டப்பட்டு வருவது தொடர்பாக பலரும் பேசி வரும் நிலையில், பிரபல நடிகையாக இருந்த நீத்து சந்திராவும் அது பற்றி பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.