சென்னையில் இந்த பகுதிகளில் இன்று (ஜூலை:16) மின்தடை

சென்னையில் இன்று (ஜூலை:16) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அடையார் மற்றும் ஆவடி, திருவொற்றியூர்  ஆகிய துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அடையார்;  திருவான்மியூர் கண்ணப்பன் நகர் 1, 2 மெயின் ரோடு மற்றும் விரிவு, ஏ.ஜி.எஸ்  காலனி,  ஸ்ரீராம் அவென்யூ 1 முதல் 4 வது குறுக்கு தெரு, வேம்புலியம்மன் கோயில் தெரு, ஈ.சி.ஆர் பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்..

ஆவடி; அலமாதி பாண்டீஸ்வரம் கிராமம், அருகம்பாக்கம் கிராமம், கொடுவள்ளி கிராமம், காரணி கிராமம், தாமரைப்பாக்கம் கிராமம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

திருவொற்றியூர்: டி.எச் ரோடு, எஸ்.பி கோயில், பெரியர் நகர், ராஜீவ்காந்தி நகர், சி.எம்.ஆர்.எல், விம்கோ நகர், பாலகிருஷ்ணா நகர் பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.