சென்னை | பராமரிப்பு பணியால் மின்சார ரயில்கள் ரத்து

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னை கோட்டத்தில் சில மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:நெல்லூர் – சூலூர்பேட்டை காலை 10.15 மணி, சூலூர்பேட்டை – நெல்லூர் காலை 7.50 மணி, மூர்மார்க்கெட் – சூலூர்பேட்டை அதிகாலை 5.20 மணி, சூலூர்பேட்டை – மூர்மார்க்கெட் மதியம் 12.35 மணி, ஆவடி – மூர்மார்க்கெட் அதிகாலை 4.25 மணி, மூர்மார்க்கெட் – ஆவடி இரவு 9.15 மணி ஆகிய மின்சார ரயில்கள் ஜூலை 19-ம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன.

விஜயவாடா – சென்னை சென்ட்ரல் காலை 6.10 மணி, மறுமார்க்கத்தில் சென்னை சென்ட்ரல் – விஜயவாடா மதியம் 2.10 மணிக்கு புறப்படும் பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில் ஜூலை 19, ஆகஸ்ட் 2 ஆகிய நாட்களில் கூடுர் – சென்னை சென்ட்ரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.