அரசியல் அமைப்பின்படி ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான விசேட அறிக்கையை வெளியிடுவதற்காக பாராளுமன்றம் இன்று முற்பகல் பத்து மணிக்குக் கூடவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று முன்தினம் (14) முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார் இதனையடுத்து ஜனாதிபதி பதவியில் வெற்றிடம் ஏற்பட்டு மூன்று நாட்களுக்குள் பாராளுமன்றம் கூட்டப்படவேண்டும். அதன்படி, ஜனாதிபதி வெற்றிடம் தொடர்பில் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க இன்று அறிவிக்கவுள்ளார்.
நேற்றுக் கூடிய கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுக் கூட்டத்தின்போது ஏற்கனவே தீர்மானித்ததன்படி எதிர்வரும் 20ஆம் திகதி புதிய ஜனாதிபதியை பாராளுமன்றம் தெரிவு செய்யும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.
எதிர்வரும் 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வேட்புமனு கோரப்பட்டு 20ஆம் திகதி ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.