தென்காசி: தமிழ்நாட்டில் நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள 4 அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை நீடிக்கிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழையால் நீர்வரத்து அதிகரித்து அணைகள் நிரம்பி வருகின்றன. வேலூர் மோர்தனா அணை, தென்காசி குண்டாறு அணை, திண்டுக்கல் வர்தமாநதி, கோவை சோலையாறு அணை நிரம்பியது.