“பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க முயற்சித்தும், அவை பலன் தரவில்லை” – கோத்தபய ராஜபக்சே

இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க எவ்வளவோ முயற்சித்தும், அவை பலன் தரவில்லை என்றும் மக்களுக்கு எப்போதும் சேவையாற்ற தயாராக உள்ளதாகவும் கோத்தபய ராஜபக்சே தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அந்நாட்டின் நாடாளுமன்றம் இன்று கூடிய போது, சபாநாயகருக்கு கோத்தபய, அனுப்பிய பதவி விலகல் கடிதம் வாசிக்கப்பட்டது.

அதில், 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் கொரோனா பொது முடக்கங்கள் நடைமுறைப்படுத்தியதன் மூலம் நாடு அந்நியச் செலாவணியை இழந்ததாகவும், பொருளாதாரம் மேலும் பாதிப்படைந்ததாகவும் கோத்தபய தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.