லலித்மோடியுடன் எல்லையற்ற அன்பால் சூழப்பட்டுள்ளேன்! சுஷ்மிதா சென் விளக்கம்…

டெல்லி: லலித்மோடியுடன் எல்லையற்ற அன்பால் சூழப்பட்டுள்ளேன் என இந்தியாவின் முன்னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதாசென் விளக்கம் அளித்துள்ளார். சுஷ்மிதா  சென் முதன்முதலாக தமிழ் திரையுலகில் முதலில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் உருவாக காரணமாக இருந்த முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித்மோடி மீது மேட்ச் பிக்சிங் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளன. கடந்த 2010ஆம் ஆண்டு, 470 கோடி ரூபாய் ஊழல் புகாரில் சிக்கினார். இது தொடர்பாக அமலாக்கத்துறை மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில் லலித்மோடி இந்தியாவிலிருந்து தப்பித்து லண்டனில் தஞ்சமடைந்தார். அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்.

இவர் சமீபத்தில் இவர் முன்னாள் இந்திய பிரபஞ்ச அழகியான சுஸ்மிதான சென்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.  அத்துடன் அவர் வெளியிட்ட பதிவில்  ‘என் வாழ்வில் ஒரு புது அத்தியாயம் தொடங்கியுள்ளது. சுஷ்மிதாவை காதலிக்கிறேன். காதல் என்பதால் கல்யாணம் ஆனது என்பது அல்ல. ஆனால், ஒரு நாள் அதுவும் நடக்கும். இப்போது நாங்கள் ஒன்றாக டேட்டிங்கில் இருக்கிறோம்’ என்று பதிவிட்டுள்ளார்.

இந்த செய்தி காட்டுத்தீ போல் சமூக வலைதளங்களில் வைரலானது. நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டவண்ணம் இருந்தனர். லலித் மோடி, சுஷ்மிதாவை திருமணம் செய்துகொண்டாரா? என்று பலரும் கேள்வி எழுப்பினர். இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் பரவலாக பேசப்பட்டது.

தற்போது 54 வயதாகும் லலித்மோடி, 46 வயதுடைய சுஸ்மிதான சென்னுடன் திருமணம் செய்யாமல்  லிவிங் டு கெதர் என்ற முறையில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. சுஸ்மிதா சென் 1994-ஆம் ஆண்டு நடைபெற்ற 43வது பிரபஞ்ச அழகிப் போட்டியில் பங்கேற்று பிரபஞ்ச அழகியாக மகுடம் சூடியவர். இவர்  இதுவரை யாரையும் திருமணம் செய்யவில்லை. ஆனால், ரெணி மற்றும் அலிசா என்ற இரு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்த நிலையில், அவர் லலித் மோடியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தைக் கண்ட நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இது சர்ச்சையானது.

இந்த நிலையில், நெட்டிசன்களின் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சுஷ்மிதா சென், தனது சமூக வலைதளபக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில்,  தனது இரு மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளதுடன்,  “நான் மகிழ்ச்சியான இடத்தில் இருக்கிறேன். திருமணம் ஆகவில்லை. மோதிரம் மாற்றிக்கொள்ளவில்லை. எல்லையற்ற அன்பால் சூழப்பட்டுள்ளேன். தேவையான விளக்கத்தை அளித்துவிட்டேன். இப்போது என் வாழ்க்கை மற்றும் வேலைக்கு செல்லப்போகிறேன். எனது மகிழ்ச்சியை பகிர்ந்தவர்களுக்கு நன்றி. அப்படி செய்யாதவர்களுக்கு இது தேவையில்லாத ஒன்று” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.