கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு.. தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன.? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்.!!

கள்ளக்குறிச்சி அருகே கணியாமூர் கிராமத்தில் இயங்கி வந்த தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தைச் சார்ந்த 17 வயது சிறுமி பள்ளி விடுதியில் தங்கி இருந்து பன்னிரண்டாம் வகுப்பு படிந்து வந்தார். கடந்த ஜூலை 13ஆம் தேதி இரவு பள்ளியின் விடுதி மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. 

ஆனால் தனது மகளின் மரணத்தின் சந்தேகம் இருப்பதாக மாணவி தாயார் புகார் தெரிவித்து இருந்தார். அதற்கேற்ற போல பிரதேச பரிசோதனையில் மாணவியின் உடலில் காயங்கள், ஆடைகளில் ரத்த கரைகளும் இருந்தது தெரியவந்தது. இதனால், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது எடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கலைத்தனர். 

அதன்பிறகு மக்கள், மாணவ அமைப்பில் என பல்வேறு தரப்பினர் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது காவல்துறையினர் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றதால், போராட்டம் வன்முறையாக மாறியது. பள்ளி வளாகத்திற்குள் இருந்து பேருந்துகளை தீ வைத்து எரித்தும், போலீஸ் வாகனத்தை தீ விபத்து எரித்தும் தனது ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டனர். போராட்டம் வன்முறையாக வெடித்ததால் போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். பதிலுக்கு போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசினர்.  நிலைமை விபரீதமான அதை அறிந்து, இந்த விவகாரத்தை விசாரிக்க சிபிசிஐடிக்கு உத்தரவிடப்பட்டது. 

இதையடுத்து, கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனியார் பள்ளியின் முதல்வர், தாளாளர், ஆசிரியைகள் உட்பட ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில்,  பள்ளி கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஷ், கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, மாணவி மரண வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.