சின்னசேலம் கலவரம்: “திமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டும்!" – எடப்பாடி பழனிசாமி

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தமிழ்நாடு முழுக்க பேசுபொருளாக மாறியிருக்கிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “கள்ளக்குறிச்சியில் நடந்த வன்முறை திடீர் கோபத்தில் வெடித்தது அல்ல” எனக் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “கள்ளக்குறிச்சி சம்பவத்துக்காக தி.மு.க., அரசு வெட்கி தலைகுனிய வேண்டும். பள்ளியின் தாளாளர், செயலாளர் முதல்வர் மற்றும் மற்ற ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இவையெல்லாம் முன்கூட்டியே செய்யப்பட்டிருந்தால் இது மாதிரியான அசம்பாவிதங்களை தவிர்த்திருக்கலாம். இதை செய்ய இந்த விடியா அரசு தவறிவிட்டது.

கலவரம் | தனியார் பள்ளி

உளவுத்துறை மூலமாக தகவல்களைச் சேகரித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் இது போன்ற வன்முறையை தடுத்திருக்கலாம். உளவுத்துறை செயலற்றுவிட்டது அதனால்தான் இப்படிப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது. இந்த அரசாங்கம் மாணவியை இழந்து தவிக்கும் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லி, உடனே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி

ரௌடிகளுக்கும், குண்டர்களுக்கும் பாதுகாப்பளித்து அ.தி.மு.க அலுவலகத்தில் நுழைய வைத்து வேடிக்கை பார்த்தது இந்த தி.மு.க அரசாங்கம். இவர்கள் ஆட்சியில் அது மாதிரியான நிகழ்வுகளைத்தான் காணமுடியும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.