16 வயது பள்ளி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி! தமிழகத்தில் சம்பவம்


தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவி, மாடியில் இருந்து குறித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

தனது தந்தை இறந்துவிட்டதால் பெரியப்பா துணையுடன் குறித்த மாணவி வழக்கமாக பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில், காலை பள்ளியில் இறை வழிபாடு நடந்துகொண்டிருந்தபோது குறித்த மாணவி அதில் கலந்துகொள்ளாமல் தனியாக இருந்துள்ளார்.

திடீரென அவர் பள்ளியின் மூன்றாவது மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்துள்ளார். இதனை கவனித்த ஆசிரியர்களும், மாணவர்களும் பதறியடித்து ஓடி மாணவியை மீட்டனர்.

பின்னர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட ஆட்சியர் மருத்துவமனைக்கு விரைந்து விசாரணை நடத்தினார்.

அதன் பின்னர் ஊடகத்திடம் பேசிய அவர், மாணவியின் தற்கொலை முயற்சிக்கும் பள்ளிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், குடும்ப பிரச்சனை காரணமாக அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்றும் தெரிவித்தார்.

Salem Collector Karmegam

dailythanthi

மேலும், பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி ஸ்ரீமதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது சேலத்தில் மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.