இந்தியா போன்று வேறு எந்த நாடும் இலங்கைக்கு உதவவில்லை – அமைச்சர் ஜெய்சங்கர்

இந்தியா போன்று வேறு எந்த நாடும் இலங்கைக்கு அதிக உதவிகளை வழங்க வில்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவும் சூழல் தொடர்பாக டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

இதில் பேசிய ஜெய்சங்கர், மீனவர் பிரச்சனை உள்பட இலங்கையுடன் நீண்ட கால பிரச்சினைகள் பல உள்ளதாகவும், அங்கு ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டது ஆழ்ந்த கவலை அளிப்பதாகவும் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.