இயக்குனர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி! மனைவி சுஹாசினி வெளியிட்ட தகவல்


தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம்.

தற்போது மணிரத்னம் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார்.

இவர், மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், தளபதி, ரோஜா, பம்பாய், இருவர், உயிரே, கன்னத்தில் முத்தமிட்டால்,அலைபாயுதே, ஆய்த எழுத்து, குரு, ராவணன், ஓ காதல் கண்மணி ஆகிய படங்களை இயக்கி இந்திய சினிமாவில் தனிக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். 

பொன்னியின் செல்வன் படத்தை வெளியிடுவதற்கான  பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

இந்த நிலையில், மணிரத்தினத்துக்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டுள்ளது.

இயக்குனர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி! மனைவி சுஹாசினி வெளியிட்ட தகவல் | Director Mani Ratnam Covid Postive Suhasini Told

இதன் காரணமாக இன்று மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார் என மனைவி சுஹாசினி தெரிவித்துள்ளார். தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும், கூறப்படுகிறது.

மேலும், அவருடைய தந்தை 92 வயது, தாய்க்கு 88 வயது என்பதால், தனிமைப்படுத்துவது அவசியம் என மருத்துவனையில் இருக்கிறோம் என சுஹாசினி கூறியுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.