கள்ளக்குறிச்சி கலவரத்தின் பின்னணியில் யார்..? சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு – டி.ஜி.பி.

கள்ளக்குறிச்சி கலவரத்தின் பின்னணியில் இருந்த நபர்கள் குறித்த தீவிர விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

கலவரம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் காவல்துறை உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

அதனை தொடர்ந்து டி.ஜி.பி. வெளியிட்ட அறிவிப்பில், சேலம் டி.ஐ.ஜி பிரவீன் குமார் தலைமையில் புலனாய்வு குழு செயல்படும் என்றும், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் வெளியான உண்மைக்கு புறம்பான தகவல்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.