தமிழிசைக்கு வரவேற்பு அளிப்பது யார்..? இருதரப்பினரிடையே மோதல்

புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியம் சென்ற துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை வரவேற்பதில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏனாம் பிராந்தியத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற தமிழிசை சவுந்தரராஜனுக்கு வரவேற்பு அளிப்பதில், ஏனாம் எம்.எல்.ஏ  கொல்லப்பள்ளி அசோக்கின் ஆதரவாளர்களுக்கும், புதுச்சேரி அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி மல்லாடிகிருஷ்ணாராவின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

ஆளுநர் கண் முன்னே மாறி மாறி தாக்கிகொண்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.