பாஜக வை விமர்சித்த பாஜக எம்.பி – என்ன காரணம் தெரியுமா ?

அரிசி பால் தயிர் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு 5% ஜி.எஸ்.டி வரியை மத்திய அரசு அறிவித்திருந்தது. இந் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருண் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் அத்தியாவசிய பொருட்களான அரிசி பால் தயிர் போன்ற பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்பாக இந்த பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி இல்லை.

இது சாமானிய மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை கண்டித்து பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் போராட்டங்கள் நடத்தின.

இந்நிலையில் பாஜக எம்பி வருண் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ” அரிசி, பால், தயிர், பருப்பு போன்ற பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிப்பது மக்களுக்கு கடும் பொருளாதார சுமையை அதிகரிக்கும். நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் சாதனை படைக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இது நடுத்தர குடும்பம் மற்றும் வாடகை வீட்டில் குடியிருப்போருக்கு பெரும் நிதி சுமையை ஏற்படுத்தும். மக்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டிய இந்த நேரத்தில் நாம் அவர்களை துன்புறுத்திக் கொண்டு இருக்கிறோம் “

இவ்வாறு வருண்காந்தி ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்துக்களை பதிவிட்டுள்ளார். பாஜக மேலிடத் இருக்கும் வருண் காந்தியின் ட்விட்டர் பதிவு சென்றிருக்கிறது.

வருண் காந்தியின் இத்தகைய செயல்கள் அரசியல் வட்டாரங்களில் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.