அரசு ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!

தமிழகத்தில் அண்மையில் இரண்டு அரசு ஒப்பந்ததாரர்களின் இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதாவது, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த அரசு ஒப்பந்ததாரரான செய்யாதுரை என்பவர் தனது எஸ்.பி.கே நிறுவனம் மூலம் பெருமளவில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார் எழுந்தது. இவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சம்மந்திக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

மேலும் அதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் நண்பரும், அரசு ஒப்பந்ததாரருமான சந்திரசேகருக்கு தொடர்புடைய இடங்களிலும் வரி ஏய்ப்பு காரணங்களுக்காக வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது சில முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.

வருமான வரித்துறை

இந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில் சுமார் 20 அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. கணக்கில் காட்டப்படாத வருமானம் தொடர்பான புகாரில் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் வீடுகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக மதுரையில் கிளாட்வே, அன்னை பாரத் சிட்டி, கிளாட்வே கிரீன் சிட்டி நிறுவனம் தொடர்புடைய இடங்களில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.