உலகின் 4வது செல்வந்தராக இடம் பெற்றார் கௌதம் அதானி..!

உலகப் பணக்காரர்களில் 4வது இடத்திற்கு இந்தியாவின் கௌதம் அதானி முன்னேறியுள்ளார்.

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள புதிய பட்டியலில், அவருடைய சொத்து மதிப்பு 2 புள்ளி 9 பில்லியன் டாலர் உயர்ந்து 115 புள்ளி 5 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் பில்கேட்ஸ் தமது சொத்தில் இருந்து 20 பில்லியன் டாலரை பில் அண்ட் மிலந்தா அறக்கட்டளைக்கு ஒதுக்குவதாக அறிவித்திருந்தார்.

இதனால் செல்வந்தர்களின் பட்டியலில் மாற்றம் ஏற்பட்டு கௌதம் அதானி நான்காவது இடத்துக்கு முன்னேறினார். ரிலையன்ஸ் குழுமத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி பத்தாவது இடத்தில் உள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.