தென் ஆப்பிரிக்காவிற்கு கடத்தப்பட இருந்த பழங்கால சிலைகள் கைப்பற்றிய போலீசார்.!

சுவாமிமலையில் இருந்து தென் ஆப்ரிக்காவிற்கு கடத்தப்பட இருந்த 6 பழங்கால ஐம்பொன் சிலைகளை போலீசார் கைப்பற்றினர்.

திருவலஞ்சுழியில் இயங்கி வரும் ஸ்ரீ தர்ஷன் ஆர்ட் மெட்டல்ஸ் என்ற சிற்பக்கலைக்கூடத்தில், தென் ஆப்ரிக்காவிற்கு கடத்துவதற்காக பழங்கால சாமி சிலைகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

அங்கு போலீசார் சோதனையிட்ட போது, நடராஜர், கிருஷ்ணர், விநாயகர், அம்மன் என 6 பழங்கால ஐம்பொன் சிலைகள் கிடைத்தன.கடை உரிமையாளர் ராமலிங்கத்தை கைது செய்த போலீசார், சிலைகள் திருடப்பட்ட கோவில், அவற்றின் தொன்மை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.