மேகதாது குறித்து விவாதிக்க உச்சநீதிமன்றம் தடை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்க கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே 3 முறை ஒத்திவைக்கப்பட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், மேகதாது அணை குறித்து விவாதிக்கக்கூடாது என தமிழக அரசு வலியுறுத்தி வந்தது. இதனை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்திலும் தமிழக அரசு வழக்குப்பதிவு செய்தது.

latest tamil news

இதனை விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை நடத்த தடையில்லை. மேகதாது குறித்த விரிவான திட்ட அறிக்கை குறித்து ஆய்வு செய்து விவாதிக்கலாம். ஆனால், மேகதாது அணை கட்டுவது தொடர்பான எந்த முடிவும் எடுக்கக்கூடாது. 2018 ம் ஆண்டில் இருந்து மேகதாது பிரச்னை இருக்கிறது. ஒரு வாரம் ஒத்திவைத்தால் ஒன்றும் ஆகாது. மேகதாது பற்றி விவாதிக்கலாமா என்பது பற்றி காவிரி ஆணையம் தெளிவுப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.