20 அரசு ஒப்பந்ததாரர்களின் இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை.!!

தமிழகத்தில் சுமார் 20 அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் ராமநாதபுரத்தை சார்ந்த அரசு ஒப்பந்ததாரரான செய்யாத்துரைக்கு சொந்தமான அலுவலகங்கள், வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதேபோல முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு நெருக்கமான மற்றொரு அரசு ஒப்பந்ததாரரான சந்திரசேகரின் தொடர்புடைய இடங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இருவரும் சேர்ந்து 500 கோடி ரூபாய்க்கு மேல் வருமானத்தை மறைத்து கணக்கு காட்டி இருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக இன்று 20 அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.