அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோனியா ஆஜர்: காங்கிரஸ் போராட்டம்!

அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தின் பங்குகளை சோனியா காந்தி, ராகுல் காந்தி இயக்குநர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் முறைகேடு நடந்ததாகக் கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடுத்தார். அதன்படி, சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. சோனியாகாந்தி கடந்த ஜூன் மாதம் 8ஆம் தேதியும், ராகுல் காந்தி கடந்த ஜூன் மாதம் 2ஆம் தேதியும் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், வெளிநாட்டில் இருந்ததால் ராகுல் காந்தி வேறு தேதியை ஒதுக்குமாறு கேட்டுக்கொண்டார். அதேபோல், உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள சோனியாவும் வேறு தேதியை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அதன்படி, ராகுல் காந்தி நேஷனல் ஹெரால்டு வழக்கில்
காங்கிரஸ்
எம்.பி., ராகுல் காந்தி கடந்த மாதம் தொடர்ந்து இரு தினங்கள் ஆஜரகி விளக்கம் அளித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தினர்.

இந்த நிலையில், ஜூலை 21ஆம் தேதி (இன்று) விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன்படி, டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோனியா காந்தி ஆஜரானார். அவருடன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.

முன்னதாக, அரசியல் உள்நோக்கத்துடன் இந்த விசாரணை நடைபெறுவதாகவும், ஆளும் பாஜக அரசு மத்திய அமைப்புகளை சொந்த ஆதாயத்திற்கு பயன்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டிய காங்கிரஸ் கட்சியினர், நாடு முழுவதும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். “அமலாக்கத் துறை இயக்குநரகம் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) போன்ற சட்ட அமலாக்க மற்றும் புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தும் சட்டங்களை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது.” என்று குற்றம் சாட்டிய காங்கிரஸ் எம்.பி., இந்த விவகாரம் தொடர்பாக இரு அவைகளிலும் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்திருந்தனர்.

அந்த வகையில், நாடாளுமன்றம் கூடியதும் இந்த விவகாரத்தை எழுப்பிய காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு அவைகளும் தள்ளி வைக்கப்பட்டன. தொடர்ந்து, மக்களவை, மாநிலங்களவையில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் எம்.பி.,க்கள் நாடாளுமன்ற வளாகத்திலும் தொடர்ந்து, காங்கிரஸ் அலுவலகம் சென்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.