சாலை தடுப்புச்சுவரில் இருசக்கர வாகன மோதி விபத்து.! மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு.!

சாலை தடுப்புச்சுவரில் இரு சக்கர வாகன மோதி விபத்தில் மின்வாரிய ஊழியர் உயிரிழந்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் மேட்டுபிரான்சேரி வடக்கு தெருவை சேர்ந்த சுப்பையா என்பவரின் மகன் பெருமாள் (52). இவர் திருநெல்வேலி மகாராஜபுரம் மின்வாரிய அலுவலகத்தில் போர்மேனாக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி ஜாக்குலின். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் பெருமாள் கயத்தாறிலிருந்து மேட்டுபிரான்சேரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது ராஜாபுதுக்குடி சாலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெருமாள் படுகாயமடைந்த நிலையில் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பெருமாள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.