தலைக்கவசம் உயிரைக் காக்கும்.. பேருந்தின் பின்பக்க சக்கரத்திற்கு அடியில் சிக்கி உயிர் தப்பிய இளைஞர்..!

பேருந்தின் சக்கரத்திற்கு அடியில் சிக்கிய இளைஞர் ஒருவர், ஹெல்மெட் அணிந்திருந்ததால் உயிர் தப்பிய காட்சியை பெங்களூரு போக்குவரத்து இணை ஆணையர் ரவிகந்தே கவுடா சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

ஐஎஸ்ஐ முத்திரை கொண்ட தரமான ஹெல்மெட் உயிரைக் காக்கும் என்று அவர் தனது பதிவில் வலியுறுத்தி இருக்கிறார். பிரேசிலின் ரியோடி ஜெனிரோ நகரில் நேரிட்ட இந்த விபத்தில், இருசக்கர வாகனம் ஓட்டி 19 வயது இளைஞர், வளைவில் திரும்பிய போது கீழே விழுந்து பேருந்தின் பின்பக்க சக்கரத்தின் அடியில் சிக்கிய நிலையில், ஹெல்மெட் அணிந்திருந்ததால் சிறு காயத்துடன் உயிர் தப்பினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.