திண்டுக்கல்.! சரக்கு வாகனம் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.!

திண்டுக்கல் மாவட்டத்தில் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து சரக்கு வாகனம் விபத்துக்குள்ளானது.

கரூர் மாவட்டத்தை தேர்ந்த விஜய் என்பவர் நர்சரி தோட்டம் வைத்துள்ளார். இவரது தோட்டத்திற்கு ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள உரமூட்டைகளை ஏற்றிக்கொண்டு மதுரையில் இருந்து சரக்கு வாகனம் ஒன்று கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்பொழுது வேடசந்தூர் அருகே திண்டுக்கல் கரூர் நான்கு வழி சாலையில் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம், வேகமாக சென்று அங்கிருந்த 10 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஓட்டுநர் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.