நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியாகாந்தியிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு-போராட்டத்தில் கார்கள் தீ வைத்து எரிப்பு

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதை கண்டித்து பெங்களூருவில் இளைஞர் காங்கிரஸார் நடத்திய போராட்டத்தின் போது கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது.

சாந்திநகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தின் போது இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் ஒரு காரை தீ வைத்து எரித்தனர்.

ஷேஷாத்ரிபுரத்தில் நடைபெற்ற போராட்டத்திலும் ஒரு வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டது. இந்த சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.