ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முர்முவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் மு க
ஸ்டாலின்
ஆகியோர் டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர் .
பிரதமர் நரேந்திர மோடி” பழங்குடி இனத்தை சேர்ந்த இந்தியாவின் மகள் ஒருவர், இந்தியாவின் ஜனாதிபதி ஆகி இருப்பதை ஒட்டுமொத்த இந்தியர்களும் கொண்டாடி மகிழ்கின்றனர். திரவுபதி முர்மு மிகவும் கடினப்பட்டு முன்னேரி, மக்களுக்கு சிறந்த சேவைகளை ஆற்றி உள்ளார். அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறார். இந்தியக் குடிமக்களுக்கு நம்பிக்கை நிறைந்தவராக திகழ்கிறார், குறிப்பாக ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும்.
சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், ஜார்கண்ட் மாநில ஆளுநராகவும் இருந்தபோது தனது கடமையை சிறப்பாக செய்துள்ளார் முர்மு. அவர் முன் நின்று இந்தியாவை வலிமையான பாதையில் வழிநடத்துவார். திரௌபதி முர்முவின் வெற்றிக்காக வாக்களித்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு நன்றி ” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
திரவுபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு க ஸ்டாலின் ” இந்தியாவின் உயரிய அரசியலமைப்பு பதவியான குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரவுபதி முர்மு அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்த தாங்கள் அரசியலமைப்பிற்கும் ஜனநாயகத்திற்கும் குரல் கொடுப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு அரசியல் பிரமுகர்கள் இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவரான திரௌபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.