மருந்து தட்டுப்பாடு:பாகிஸ்தானில் பதற்றம்| Dinamalar

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில், அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தான், கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் சிக்கித் தவிக்கிறது. அங்கு, பயங்கரவாத பிரச்னையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
குறிப்பாக, மனநல பிரச்னைகளுக்கு பயன்படுத்தப்படும், ‘லித்தியம் கார்பனேட்’ குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் வலிப்பு நோய்க்கான ‘குளோனாசெபம்’ போன்ற மருந்துகளுக்கு, கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இவற்றுக்கான மாற்று மருந்துகள் உரிய பலன் தருவதில்லை என, டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற அசாதாரணமான சூழ்நிலைகளால், பாக்.,கில் பதற்றமான சூழல் நிலவுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.