₹600 கோடி மதிப்பிலான சொத்தை ஏழைகளுக்கு தானமாக கொடுத்த டாக்டர் – யார் இவர்?

மொராதாபாத்தைச் சேர்ந்த மருத்துவர் அரவிந்த் கோயல், ஏழைகளுக்கு உதவுவதற்காக உத்திரபிரதேச அரசுக்கு தனது சொத்து முழுவதையும் தானமாக வழங்கினார்.மொத்த சொத்தின் மதிப்பு சுமார் 600 கோடி ரூபாய். இவர் கடந்த 50 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

சொத்தை நன்கொடையாக வழங்கிய பிறகு, சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பே இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார்.

லாக்டவுன் காலத்தில் மொராதாபாத்தின் 50 கிராமங்களை தத்தெடுத்து மக்களுக்கு இலவச வசதிகளை அரவிந்த் குமார் கோயல் வழங்கியுள்ளார். அவர் மாநிலத்தில் ஏழைகளுக்கு இலவச கல்வி மற்றும் சிறந்த சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா தேவி பாட்டீல், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் உட்பட நான்கு முறை குடியரசுத் தலைவரால் டாக்டர் கோயல் கெளரவிக்கப்பட்டார்.

அரவிந்திற்கு அவரது மனைவி ரேணு கோயல், இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.அரவிந்த் கோயல் தனது சொத்து முழுவதையும் அரசுக்கு எழுதிக் கொடுத்தது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.