4 வருடங்களில் ரூ.12,000; தமிழ்நாடு சிறுபான்மை நலத்துறைக்கு மத்திய அரசின் நிதி – ஆர்.டி.ஐ தகவல்

தமிழக சிறுபான்மை நலத்துறைக்கு மத்திய அரசு சமீபகாலமாக மிகக்குறைந்த அளவில் நிதி ஒதுக்கி வருவது ஆர்.டி.ஐ தகவல் மூலம் தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திக்

இதுகுறித்து நம்மிடம் பேசிய மதுரையை சேர்ந்த ஆர்.டி.ஐ ஆர்வலர் கார்த்திக், “சிறுபான்மை மக்களின் மேம்பாட்டுக்காக மாநில அளவிலும் தேசிய அளவிலும் நலத்துறைகள் செயல்பட்டு வருகிறது. மாநில அளவிலான சிறுபான்மை நலத்துறைக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் நிதி அளிப்பது வழக்கம்.

சமீப வருடங்களாக மத்திய அரசு மாநில சிறுபான்மை நலத்துறைக்கு ஒதுக்கும் நிதி மிகக்குறைவாக இருப்பதாக தகவல் கிடைத்தது. இதை சம்பந்தப்பட்ட துறை மூலம் தெரிந்துகொள்ள ஆர்.டி.ஐ மூலம் தகவல் கேட்டிருந்தேன்.

மத்திய அரசு

கடந்த 2011-12 முதல் 2015-16 வரையிலான 5 ஆண்டுகளில் ரூ.172,43,10,000 தமிழக சிறுபான்மையினர் நலத்துறைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கிய நிலையில், கடைசி 4 வருடங்களான 2018-19 முதல் 2020-22 வரையில் ஆண்டிற்கு ரூ. 3000 வீதம் நான்கு ஆண்டுகளுக்கு வெறும் ரூ.12,000 மட்டுமே நிதி ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இன்னும் கொடுமையாக கடந்த 2016-17 மற்றும் 2018-19 நிதியாண்டுகளில் மத்திய அரசு தமிழகத்திற்கு பூஜ்ஜியம் நிதி ஒதுக்கியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

கார்த்திக்

இதன் மூலம் மத்திய அரசு சிறுபான்மையினருக்கான நலத்திட்ட நிதி ஒதுக்கீட்டை அடியோடு புறக்கணித்திருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இவ்வாறு நிதி ஒதுக்கீடுகளை தவிர்ப்பதால் மாநிலத்தில் பல வருடங்களாக சிறுபான்மையினர் மக்கள் நலனுக்காக பிரத்யேகமாக வழக்கத்தில் இருந்து வந்த கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டு பணிகள் பாதியிலேயே முடங்கியுள்ளது.

தமிழகத்தில் சிறுபான்மையினர் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு தமிழக சிறுபான்மையினர் நலத்துறைக்கு ஆண்டுதோறும் ரூ.100 கோடிகள் வரை நிதி ஒதுக்க வேண்டும். மத்திய அரசிடம் கூடுதல் நிதியை பெற தமிழக அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும்.” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.