கேரளாவில் அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளை ஒழிக்க உத்தரவு

திருவனந்தபுரம்,

கேரளாவில் 280 பெண்கள் பள்ளிகளும், 164 ஆண்கள் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அடுத்த கல்வியாண்டில் இருந்து மாநிலத்தில் உள்ள அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளை ஒழித்துவிட்டு அப்பள்ளிகளை கலப்பு பள்ளிகளாக மாற்றி இணைக்கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று கேரள கல்வித்துறைக்கு குழந்தை உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதற்கு முன்பு பள்ளிகளில் உள்ள கழிவறை உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் இணைக்கல்வியின் அவசியம் குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.

அடுத்தக் கல்வியாண்டு முதல் இணைக்கல்வியை அமல்படுத்த 90 நாட்களில் செயல்திட்டத்தை உருவாக்குமாறு கல்வித்துறையின் முதன்மை செயலாளர், பொதுக்கல்வி இயக்குநர் உள்ளிட்டோருக்கு குழந்தை உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.