பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடம் குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர்

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு நியமிக்கப்படவிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதன் பின்னர் அவர் வகித்த பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தேர்தல் ஆணைக்குழுவிற்கு நேற்று எழுத்து மூலம் அறிவித்திருந்தார் குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.