புகைப்படக்காரர்களை மிரட்டிய சித்தார்த்

தமிழில் அவ்வப்போது கதாநாயகனாக நடிப்பவர் சித்தார்த். அவர் நடித்து கடைசியாக வெளிவந்த படம் 'அருவம்'. 2019ல் வெளிவந்த அந்தப் படம் பெரிதாக ஓடவில்லை. அதன் பிறகு அவர் தெலுங்கில் நடித்த 'மஹா சமுத்திரம்' படம் கடந்த வருடம் வெளியானது. ஆனால், படம் படுதோல்வி அடைந்தது. இருப்பினும் அந்தப் படத்தில் தன்னுடன் நடித்த அதிதி ராவ் ஹைதரி உடன் அவர் நெருங்கிப் பழக வாய்ப்பு கிடைத்தது.

படம் தோல்வி அடைந்தாலும் சித்தார்த், அதிதி இடையே காதல் உருவாகி இருக்கலாம் என டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். சமீபத்தில் மும்பையில் சித்தார்த், அதிதி இருவரையும் புகைப்படக் கலைஞர்கள் ஒன்றாக படம் பிடித்தனர். அப்போது புகைப்படக்காரர்களிடம் சித்தார்த் சண்டை போட்டிருக்கிறார். அடுத்த முறை கனிவாக பேச மாட்டேன் என மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார். அந்த வீடியோவை பாலிவுட் மீடியாக்கள் வெளியிட்டுள்ளன.

சித்தார்த் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். நடிகைகள் சமந்தா, ஸ்ருதிஹாசன், சோஹா அலிகான் ஆகியோரைக் காதலித்தார் என இதற்கு முன்பும் கிசுகிசுவில் சிக்கியவர். அதிதி ராவ் ஹைதரி தன்னுடைய 21 வயதில் திருமணம் செய்து கொண்டு ஐந்து வருடங்களுக்குப் பிறகு விவகாரத்து செய்தவர். அவர் திருமணமாகி விவாகரத்து பெற்றது பலருக்குத் தெரியாது.

இருவரது காதலும் கல்யாணத்தில் முடியுமா அல்லது சித்தார்த்தின் முந்தைய காதல் போல கிசுகிசுவுடன் நிற்குமா என திரையுலகத்திலேயே கேள்வி எழுப்புகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.