ஒ.பி.எஸ் மகனுக்கு ஆதரவாக சசிகலா… இ.பி.எஸ் முடிவுக்கு எதிராக கண்டன அறிக்கை

அதிமுகவின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் கட்சியின் சார்பில் செயல்படுவ தடுக்கும் நடவடிக்கைகளை கட்சியின் கழக தொண்டர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என சசிகலா கூறியுள்ளார்.

அதிமுகவில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த பெரும் அரசியல் பரபரப்புக்கு நடுவே கடந்த 11-ந் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலரை மாற்றம் செய்வதா அறிவித்தார்.

மேலும் கட்சியில் நலனுக்கு எதிரான செயல்பட்டதாக முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஒரு சிலரை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இதில் அதிமுகவின் ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான ஒ.பி.எஸ் ரவீந்திரனும் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்தார்.

இது குறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள வி.கே.சசிகலா கூறுகையில்,

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளு தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. அந்த தோல்வி குறித்து சிந்திக்காமல் தொண்டர்கள் பற்றி கவலையும் படாமல் தன் சுய தேவையை மனதில் வைத்துக்கொண்டு ஒரு சிலரின் செயல்பாடுகளால் அதிமுக அழிவை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக கழக தொண்டர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

அதிமுகவின் ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை (ஒ.பி.ரவீந்திரன்) கட்சியின் சார்பில் செயல்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளை கழக தொண்டர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதிமுக எம்ஜிஆர் என்ற மனிதரால் தோற்றுவிக்கப்பட்டு, அம்மா என்ற பெண் சிங்கத்தால் பாதுகாக்கப்பட்டு வந்த பேரியக்கம்.

ஜெயலலிதா நம்மை விட்டு சென்ற நாள் முதல், இன்று வரை நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுகளும், ஒரு சில சுயநலவாதிகள் மேற்கொண்ட தவறான முடிவுகளால் அதன் சிறப்பு குறைந்து தன் பெருமைகளை ஒவ்வொன்றாக இழந்து வருவதாக கழக தொண்டர்கள் கண்ணீர் வடிக்கின்றனர். தன் சொந்த விருப்பத்திற்காக, நாடாளுமன்றத்தின் மக்களவையில் கட்சியின் அங்கீகாரத்தையே அழிக்க நினைப்பதை தன் உடம்பில் உண்மையான அண்ணா திமுக இரத்தம் ஓடுகின்ற கழகத் தொண்டர்கள் யாரும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் இயக்கம் அழிந்தாலும் பரவாயில்லை எப்படியாவது பதவிகளை தட்டி பறிக்க வேண்டும் என்று தாண்டி குதிப்பவர்களை எண்ணி யாரும் சிறிதும் கவலைப்படாதீர்கள். இவர்கள் எண்ணம் தவறானது, இயக்கத்திற்கு எதிரானது என்பது வெளிப்படுகின்ற காலம் வந்துவிட்டது. உண்மையான கழகத் தொண்டர்களின் பேராதரவோடு, நம் இயக்கம் சீரோடும் சிறப்போடும் செழிக்க இருக்கிறது. இதை யாராலும் தடுக்கவும் முடியாது.

அதேபோன்று, இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும். இதை எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் கண்கூடாக பார்க்கத்தான் போகிறீர்கள் என்பதையும் இந்நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.