கிக் ஏத்தும் 'ஆணுறை' – போதைக்கு அடிமையாகிய இளைஞர்கள்!

மேற்கு வங்க மாநிலத்தில், இளைஞர்கள் சிலர், ஆணுறைகளை போதைப் பொருளாக பயன்படுத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள துர்காபூர் நகர், பிதான் நகர், பெனாசிட்டி, முச்சிபாரா, சி மண்டலம் மற்றும் ஏ மண்டலம் ஆகிய இடங்களில், மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் வரிசையில் நின்று ஆணுறைகளை வாங்கிச் செல்கின்றனர். இதனால் ஆணுறை விற்பனை பத்து மடங்கு அதிகரித்து உள்ளதாக துர்காபூரில் உள்ள கடைக்காரர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆணுறைகளுக்கு இளைஞர்கள் அடிமை ஆகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதாவது, ஆணுறைகளை சூடான நீரில் ஊற வைக்கும் போது, ஒருவித போதை தரும் ஆல்கஹால் வெளியாகிறது. மாணவர்கள் அந்த திரவத்தை அருந்துகிறார்கள். இது மிகவும் போதை தரக்கூடியதாக உள்ளது. இந்த திரவம் மாணவர்களுக்கு 10 முதல் 12 மணி நேரம் வரை போதை தருவதாக அதிகாரிகள் தெரிவிப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து துர்காபூர் கல்லூரி வேதியியல் ஆசிரியர் நூருல் ஹக் கூறுகையில், “ஆணுறைகளை நீண்ட நேரம் வெந்நீரில் ஊற வைப்பதால் பெரிய கரிம மூலக்கூறுகள் உடைந்து போதை தரும் ஆல்கஹால் கலவைகள் உருவாகின்றன. இந்த கலவை இளைஞர்களை போதையில் ஆழ்த்துகிறது” என கூறினார். துர்காபூர் மாவட்ட மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் திமான் கூறுகையில், “ஆணுறையில் ஒருவித நறுமண கலவை உள்ளது. அதை உடைப்பதன் மூலம் மது உற்பத்தியாகிறது” என கூறினார்.

போதைக்காக, இளைஞர்கள் ஆணுறைகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி வருவது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் இருந்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களை மீட்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.