அலரி மாளிகை, ஜனாதிபதி மாளிகை, பிரதமர் செயலகம் மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகிய இடங்களை சேதப்படுத்தி அங்கிருந்த பெறுமதியான பொருட்களை களவாடியதாக கூறப்படும் 100இற்கும் மேற்பட்டோரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் ஊடாக இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விரைவில் கைது செய்யப்படுவர்..
புலனாய்வுப் பிரிவினரின் ஆதரவுடன் அந்த நபர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைகள் முடிவடைந்தவுடன் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.