மும்பையில் உள்ள டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனை இலங்கைக்கு அவசரமாகத் தேவைப்படும் புற்றுநோய் மருந்துகளை நன்கொடை

மும்பையில் உள்ள டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனை இலங்கை ரூபாய் 20 மில்லியன் பெறுமதியான புற்றுநோய் மருந்துகளை 2022 ஜூலை 15ஆந் திகதி இலங்கைக்கு வழங்கியது.

இந்த நன்கொடையில் மஹரகமவில் உள்ள அபேக்ஷா புற்றுநோய் மருத்துவமனைக்குத் தேவையான வெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்ட புற்றுநோய் சிகிச்சை மருந்துகளும் இடம்பெற்றுள்ளன. இலங்கைக்கு மருத்துவப் பொருட்களை விமானத்தில் கொண்டு செல்வதற்குத் தேவையான ஒப்புதல்கள் மற்றும் அனுமதிகளை எளிதாக்குவதற்காக மும்பையில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் நன்கொடையாளர் மற்றும் தொடர்புடைய இலங்கை மற்றும் இந்திய அதிகாரிகளுடன் 2022 ஜூலை 16ஆந் திகதி ஒருங்கிணைத்தது.

இந்த கையளிப்பு விழாவில், நன்கொடையை ஏற்பாடு செய்த டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனையின் பின்வரும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்: டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் சி.எஸ். பிரமேஷ், டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனையின் பீடியாட்ரிக் என்கொலஜி பிரிவின் பேராசிரியர் மற்றும் தலைவர் பேராசிரியர் வைத்தியர் கிரிஷ் சின்னசாமி, டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனையின் உதவி மருத்துவக் கண்காணிப்பாளர் வைத்தியர் வினித் சமந்த், டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனையின் புற்றுநோயியல் உதவிப் பேராசிரியர் வைத்தியர் வெங்கட ராம மோகன் கொல்லமுடி, டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனையின் பொது முகாமையாளர் (சி.எஸ்.ஆர்.) சுனிதா ராவ் மற்றும் டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனையின் மருந்தாளர் வோனோத் நாயர்.

இந்த நன்கொடையை வழங்கும் நிகழ்வில் மும்பையில் உள்ள இலங்கையின் தூதரகத் தூதுவர் கலாநிதி. வல்சன் வேத்தோடி மற்றும் துணைத் தூதுவர் (வணிகம்) சந்துன் சமீர ஆகியோர் கலந்துகொண்டனர். இலங்கைக்கு தேவைப்படும் இந்த நேரத்தில் டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனையின் வழங்கிய விலைமதிப்பற்ற நன்கொடையைப் பாராட்டிய துணைத் தூதுவர், டாட்டா ஞாபகார்த்த நிலையம் மற்றும் இலங்கையில் உள்ள புற்றுநோய் சிகிச்சை நிறுவனங்களுக்கு இடையே புற்றுநோய் சிகிச்சை அறிவு மற்றும் நிபுணத்துவத்தை பரிமாறிக்கொள்வதற்கு மேலும் ஒத்துழைப்பைக் கோரினார்.

உலகின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய புற்றுநோய் மையங்களில் ஒன்றான டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனை, 75 ஆண்டுகளுக்கும் மேலான விதிவிலக்கான நோயாளர் பராமரிப்பு, உயர்தரப் பயிற்சி மற்றும் புதுமையான புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் தேசிய மற்றும் உலகளாவிய புற்றுநோய் கட்டுப்பாட்டு முயற்சிகளில் முன்னணியில் உள்ளது. இது இந்தியாவில் புற்றுநோய்க்கான தடுப்பு, சிகிச்சை மற்றும் ஆராய்ச்சிக்கான விரிவான தேசிய புற்றுநோய் மையமாகும்.

டாட்டா ஞாபகார்த்த நிலையம் அடிப்படை, மொழிபெயர்ப்பு, தொற்றுநோயியல் மற்றும் மருத்துவ புற்றுநோய் ஆராய்ச்சியில் உலக அளவில் முன்னணியில் உள்ளது. டாட்டா ஞாபகார்த்த நிலையத்தில் உள்ள ஆராய்ச்சியில் புற்றுநோய் உயிரியலைப் புரிந்துகொள்வதற்கான ஆய்வுகள், பொதுவான புற்றுநோய்களுக்கான பெரிய சமூக அடிப்படையிலான ஸ்கிரீனிங் சோதனைகள் மற்றும் கூட்டு ஆய்வுகள், நியோட்ஜுவண்ட் மற்றும் துணை சிகிச்சைகள், பெரிய அறுவை சிகிச்சை தலையீடுகள், அறுவை சிகிச்சை சோதனைகள், மறுபயன்பாட்டு மருந்துகள் மற்றும் நோயாளி பயணத்தைப் புரிந்துகொள்வதற்கான தரமான ஆராய்ச்சி ஆகியவை அடங்கும். மேலும், பயிற்சி மற்றும் கல்வி ஆகியவை டாட்டா ஞாபகார்த்த நிலையத்திற்கு முக்கிய கவனம் செலுத்தும் பகுதியான இது, இந்தியாவில் புற்றுநோயியல் பயிற்சிக்காக மிகவும் விரும்பப்படும் நிறுவனமாக உள்ளது.

இலங்கையின் துணைத் தூதரகம்,
மும்பை
2022 ஜூலை 22

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.