கவரட்டி : மாணவர்களுக்கான மதிய உணவில், அசைவ உணவு வகைகளை தொடர்ந்து தரும்படி, லட்சத்தீவு நிர்வாகம் பள்ளிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.யூனியன் பிரதேசமான லட்சத்தீவின் நிர்வாக அதிகாரியான பிரபுல் கோடா படேல், பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் வழங்கப்பட்டு வந்த அசைவ உணவை நிறுத்த உத்தரவிட்டார். மேலும், கால்நடை பண்ணைகளை மூடவும் ஆணை பிறப்பித்தார்.
இதை எதிர்த்து தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், லட்சத்தீவு நிர்வாகம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தது. பள்ளி மாணவர்களுக்கு மதியம் தொடர்ந்து அசைவ உணவுகளை வழங்கவும் உத்தரவிட்டது.இதை எதிர்த்து லட்சத்தீவு நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், கேரள உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.
அத்துடன், பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து அசைவ உணவுகள் வழங்கவும் உத்தரவிட்டது. இதையடுத்து லட்சத்தீவு நிர்வாகம் பள்ளிகளுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. அதில், அடுத்த உத்தரவு வரும் வரை ஏற்கனவே பின்பற்றி வரும் நடைமுறைப்படி, மாணவர்களின் மதிய உணவில் இறைச்சி, கோழிக்கறி, மீன், முட்டை ஆகியவற்றை தொடர்ந்து வழங்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement